தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன செய்வது

தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன செய்வது

தாய்ப்பால் ஏன் சிறந்தது

பிறந்த குழந்தைக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் ஒருங்கே கிடைக்கும் உணவெனில் அது தாய்ப்பால் மட்டுமே. ஒரு மனிதனுக்கு நிரந்தரமான நோய் எதிர்ப்பாற்றலிற்கு பெரிதும் துணையாக இருப்பது, குழந்தையாக இருக்கும் பொழுது அவனுக்கு கிடைக்கும் தாய்ப்பாலே ஆகும். தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் உடலிற்கு மட்டுமில்லை, தாயின் உடலிற்கும் நல்லது. ஆம், தாய்ப்பால் கொடுப்பதால் பெண்கள் மார்பக புற்றுநோய் வருவதிலிருந்து விடுபட முடியும்.

தாய்ப்பால் குறைய காரணம் என்ன

சில தாய்மார்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்காமல் போகும். தாய்மார்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்ப காலத்தில் உடலிற்கு வலுவூட்டும் உணவுகளை உண்ணாமல் விட்டது மற்றும் அதிக மனவுளைச்சலும் தாய்ப்பால் குறைய காரணமாகும். பின்வரும் குறிப்புகளை அறிந்துகொண்டு பின்பற்றினால் இரட்டை குழந்தைகள் பெற்ற தாய்மார்களுக்கு கூட போதுமான அளவு தாய்ப்பால் சுரக்க ஆரம்பித்துவிடும்.

தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன செய்வது

தாய்ப்பால் அதிகரிக்க ஆலம் விழுது, ஆலம் விதை, கடலை வகைகள், வெந்தயம், பூண்டு மற்றும் கீரைகள் போன்றவற்றை அதிகளவில் உணவில் சேர்க்க வேண்டும்.

  1. ஆலம் விழுது மற்றும் ஆலம் விதையை சம அளவு எடுத்து பாலில் காய்ச்சி உண்டால், தாய்ப்பாலில்லாத பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

  2. பாலூட்டும் தாய்மார்கள் பாதாம் சாப்பிடுவது மிகச்சிறந்தது. முந்திரி , பாதாம், வாதுமைக்கொட்டை (Walnuts) மற்றும் வேர்க்கடலை போன்றவை பாலூட்டும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இது அதிக அளவு ஊட்டச்சத்துகளையும், புரோட்டின் மற்றும் கால்சியத்தையும் கொண்டுள்ளதால் பால் சுரக்க துணைநிற்கின்றன.

  3. வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது நாட்டுச்சர்க்கரை கலந்து பாயாசம் போல செய்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும். மேலும், சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் சுரக்கும். கேழ்வரகை முளைக்கட்டி இடித்து அதில் முளைகட்டிய வெந்தயப் பொடியை சேர்த்துக் குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.

  4. பூண்டை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம்.

  5. அனைத்து கீரை வகைகளுமே தாய்ப்பால் சுரக்க துணை நிற்கும் என்றாலும் முருங்கக்கீரை அதீத சிறப்பு வாய்ந்தது. முருங்கைக்கீரையை பூண்டு மற்றும் மிளகுடன் சேர்த்து கொதிக்க வைத்த சாறாகவோ அல்லது தனியாக வதக்கியோ உண்ணலாம்.

இறைச்சி உணவுகள் தாய்மார்களுக்கு நல்லதா

ஆட்டிறைச்சி, நாட்டுக்கோழி மற்றும் கடல்சார் உணவுகள் என, குழந்தை பெற்ற நிலையில் தாய்ப்பால் அதிகரிக்கவும் உடலை உறுதி செய்யவும் பெரும்பாலானவர்களால் தாய்மார்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொடுக்கும் இறைச்சி உணவுகளை தயாரிக்கும் முறையில் சில மாற்றங்களை செய்து கொடுத்தால் மட்டுமே அது பயன் தரும். தாய்ப்பால் அதிகரிக்க ஆட்டிறைச்சி மற்றும் நாட்டுக்கோழி இறைச்சியை விடவும் கடல் மீன்கள் அதிக பயன்தரும்.

தாய்ப்பால் அதிகரிக்க மிக எளிய வழி

பால் சுறா, திருக்கை மற்றும் காரல் (பூச்சிமீன், காரல் பொடி மீன்) என இம்மூன்று மீன்களும் தாய்ப்பால் அதிகரிக்கச் செய்யும் அருமருந்தாகும். ஒவ்வொன்றிற்கும் உண்ணும் முறை மாறுபடும், கீழ்கண்டவாறு இவற்றை உண்பதன் மூலமாக முழுப்பலனையும் பெறலாம்.

  1. பால் சுறா – இது மீனாகவும் கருவாடாகவும் கிடைக்கிறது. இரண்டையுமே குடிமிளகு மீன் குழம்பு வைத்து சாப்பிடுவது நல்லது.

  2. திருக்கை – இது மீனாக மட்டுமே அதிகம் கிடைக்கும். திருக்கை மீனை குடிமிளகு மீன் குழம்பு வைத்து சாப்பிடுவது நல்லது.

  3. காரல் – இது அதிக முள்ளுடன் அளவில் சிறிதான மீனாகும். குழம்பாக வைத்தால் மீனில் உள்ள முட்கள் குழம்பில் கலந்துவிடுவதால் சாப்பிடுவது கடினமாக இருக்கும். எனவே காரல் மீனை அவியல் வைத்து உண்பது மட்டுமே சிறந்தது.

  4. குடிமிளகு முறையில் நவரை, கீளி மற்றும் சங்கரா போன்ற மீன்களை குழம்பு வைத்து உண்பதால், தாய்ப்பால் சுரப்பது அதிகரிப்பதோடு தாய்மார்களின் உடலும் வலுவடையும்.  

மீன் கிடைக்காதவர்கள் என்ன செய்வது

இறைச்சி உண்ணும் பழக்கம் இல்லாதவர்கள் அல்லது மேற்சொன்ன மீன்கள் கிடைக்காதவர்கள், நாள் தோறும் சுண்டு வாரச் செலவு இரசத்த தங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம்.

குறிப்பு:- குடிமிளகு மீன் குழம்பு, மீன் அவியல் மற்றும் சுண்டு வாரச் செலவு இரசம் எப்படி வைப்பது என்பது தொடர்பான பதிவுகளை கீழ்கண்ட இணைப்புகளின் வழியாக படிக்கலாம்.

தாய்ப்பால் சுரப்பை குறைக்கும் உணவுகள்

சிலர் என்ன செய்ய வேண்டும் என தெரிந்துகொண்டு எதை செய்யக்கூடாது என தெரிந்துகொள்வதில்லை. சில உணவுகள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதை போல சில உணவுகள் தாய்ப்பால் சுரப்பை குறைக்கவும் செய்யும். அதை அறிந்து கொண்டு பாலூட்டும் காலத்தில் அந்த உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.

  • புதினா – புதினா தாய்ப்பாலை நிறுத்தும் காலத்தில் உண்ணும் உணவாகும். இயற்கையாகவே புதினாவிற்கு தாய்ப்பால் சுரப்பை குறைக்கும் ஆற்றல் உள்ளதால், தாய்ப்பால் கொடுக்கும் வரை முற்றிலுமாக புதினாவை தவிர்த்து விட வேண்டும்.

  • துவரம் பருப்பு – துவரம் பருப்பிற்கும் தாய்ப்பால் சுரக்கும் ஆற்றலை குறைக்கும் வல்லமையுண்டு. எனவே தாய்ப்பால் குறைவாக சுரக்கும் தன்மையுள்ள தாய்மார்கள் தவிர்த்து விடுவது நல்லது.

  • பொறித்த உணவுகள் – எண்ணெய்யில் பொறித்த உணவுகளை (Fried foods) தவிர்க்க வேண்டும்.

  • துரித உணவுகள் – கடைகளில் கிடைக்கும் துரித உணவுகளை (fast food) தவிர்க்க வேண்டும். 

One comment

  1. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையான பதிவு அனைத்து பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்

Comments are closed.

சமூகம்

தாலி – தமிழர் பண்பாடு

எந்தவொரு இனமும் பண்பாட்டு வளர்ச்சியில் தன் ஆதிகால பழக்கத்தை முற்றிலுமாக தவிர்த்து விட கூடாது. அந்த இனத்திற்கென்ற வரலாறு அந்த பண்பாட்டின் வழி தான் தொடரும். எனவே திருமணத்தன்று தாலி கட்டும் வழக்கத்தை தொடர்வதே நல்லது. திருமணத்திர்கு பிறகு தாலிக்கயிறு அணியலாமா வேண்டாமா என முடிவெடுக்கும் உரிமை அதை சுமக்கும் பெண்ணுக்கானது.

கல்வி

நாடகக் கல்வி என்றால் என்ன?

எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடியான நிகழ்வுகளை செயற்கையாக உருவாக்கி, அந்த நிகழ்வுகளின் பொழுது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதே நாடகக் கல்வி என்பதாகும்.

முத்தமிழ் கல்வி
கல்வி

முத்தமிழ் கல்வி

இயல் இசை நாடகம் ஆகிய மூன்றும் முத்தமிழ் என்பது பலருக்கும் தெரிந்த தகவல். ஆனால் இயல், இசை மற்றும் நாடகம் எனும் முத்தமிழை அடிப்படையாக கொண்டு உலகின் தலைசிறந்த கல்வி முறையை உருவாக்கியது நம் முன்னோர் தான் என்பதனை எத்தனை பேர் தெரிந்து வைத்துள்ளோம்?

ஐம்புலன் அறிவும் கல்வியும்
கல்வி

ஐம்புலன் அறிவும் கல்வியும்

அறிவும் கல்வியும் ஐம்புலனோடு தொடர்புடையவை, அத்தகைய புலன்கள் தாயின் கருவறையிலிருந்து வெளியே வரும் வரை தனித்து இயங்குவதில்லை. தாயின் உடலை விட்டு வெளியே வந்த பின்பு தான் குழந்தை தனி உடலாக இயங்கத்தொடங்கும்.

அறிவு என்றால் என்ன
கல்வி

அறிவு என்றால் என்ன?

புலன்களுக்கும் அறிவிற்கும் என்ன தொடர்பு? புலன்களை அறிவு என தொல்காப்பியம் குறிப்பிட காரணம் என்னவென்பதை ஆய்வு செய்தோமானால், பிறருக்கு தெரியாத ஏதேனுமொரு தகவல் நமக்கு தெரிந்திருந்தால் அதை அறிவு என நாம் கருதுவோம்.